Teachers Day Tamil ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம். ஆசிரியர் பணியை நற்பணி அதற்கே உன்னை அர்ப்பணி என்ற பழமொழிக்கு ஏற்றார் போல ஆசிரியர்கள் மட்டும்தான் நம்மை பேணி காப்பதிலும் நற்பண்புகளை கற்றுக் கொடுப்பதிலும், மற்றவரிடம் எப்படி நடந்து கொள்வதும் பற்றிய அனைத்தையும் கற்றுக் கொடுக்கும் கண்கண்ட தெய்வம் ஆசிரியர்கள்.
அப்படிப்பட்ட ஆசிரியர்களுக்கு வருடம் தோறும் செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர்களை கௌரவிக்கும் விதமாக ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறோம். இதற்கு முக்கிய மற்றொரு காரணம் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாள் செப்டம்பர் 5 தான். பொதுவாக ராதாகிருஷ்ணன் பிறந்த நாளாக கருதப்படும் அந்நாளில் தான் ஆசிரியர் தினமாக நாம் கொண்டாடுகிறோம்.
ராதா கிருஷ்ணனின் பிறந்த நாள் Dr Rathakrishanan Teachers Day Tamil
பொதுவாக உலகில் எங்கும் ஆசிரியர் தினம் வெவ்வேறு தேதிகளில் கொண்டாடப்பட்டு வருகின்றன. ஆனால் தமிழ்நாடு மற்றும் இந்தியா பொருத்தவரையில் ஆசிரியர் தினத்தை ராதாகிருஷ்ணன் பிறந்தநாளில் நாம் கொண்டாடுகிறோம். அதற்கு முக்கிய காரணமாக அமைவது டாக்டர் சர்ப்பவல்லி ராதாகிருஷ்ணன் ஒரு புகழ் பெற்ற தத்துவ ஞானி மற்றும் அறிஞர் அரசியல்வாதி, பாரதி ரத்னா விருது பெற்ற நபர்.
சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் மற்றும் இரண்டாவது குடியரசுத் தலைவர் புகழ் பெற்ற தூதர், கல்வியாளர், மிகப் பெரிய மேதை இப்படி பல உன்னத பதவிகளுக்கு குறித்தானவர் டாக்டர் ராதாகிருஷ்ணன்.
கல்வியில் மிகப்பெரிய ஒரு தாக்கத்தையும் கல்வியை முக்கியத்துவத்தையும் மக்களுக்கு எடுத்துரைப்பதன் காரணமாகவே நாம் ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் என்று ஆசிரியர் தினமாக கொண்டாடிட்டு வருகிறோம்.
ஒரு மனிதனை அவனுக்கே அவன் அடையாளத்தை கண்டுபிடிக்க உதவுவதுதான் ஆசிரியரின் நற்பண்பு. ஒருவனை கல்வியில் ஞானியாகவும், சமூகத்தில் உயர்ந்த மனிதராக கருதப்படுவதற்காகவும் காரணமாக அமைவது பெற்றோர்களை காட்டிலும் ஆசிரியர்களுக்கு மிக முக்கிய பங்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.
சாதாரணமாக ஒரு கடலாக இருந்தாலும் அவை சிற்பி கொண்டு செதுக்குவதன் மூலமாக தான் அது மிக அழகான சிலையாக மாறுகிறது. அப்படி தான் ஒரு மனிதனை நற்பண்புகளுடன் உருவாக்க காரணமாக அமைவது ஆசிரியர்கள் தான்.
ஆசிரியர் தினம் Teachers Day Tamil
நாம் ஏன் செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம் என்பது அனைவருக்கும் எழக்கூடிய ஒரு கேள்விதான். கற்பித்தல் என்பது உலகின் மிகவும் செல்வாக்கும் செலுத்தும் பணியாகும். அதேபோல் கற்பிக்கும் ஆசிரியர்கள் அதை ஒரு தொழிலாக எண்ணாமல் சேவையாக எண்ண வேண்டும் என்பது மிகவும் முக்கியம்.
ஆசிரியர்களை மதித்து கௌரவிக்கும் வகையாக இந்தியாவில் தொடக்கப்பள்ளி முதல் உயர்நிலைப் பள்ளி வரை சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களுக்கு குடியரசுத் தலைவரின் கீழ் பல பாராட்டுகளும், பட்டங்களும் வழங்கப்படுவது வழக்கம்.
More Reads:விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தில் வேலை வாய்ப்பு DLSA Vilupuram Job Recruitment.